தைத்திருநாள் கொண்டாட்டம் 2024 துணுக்காய் பிரதேச சபை ஊழியர் நலன்புரிச்சங்கத்தினரால் கடைப்பிடிப்பு
துணுக்காய் பிரதேச சபை அலுவலகத்தில் ஊழியர் நலன்புரிச்சங்க தலைவர் திரு.தே.கார்த்திகன்(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) அவர்களின் தலைமையில்
சபைச் செயலாளர் திரு.அ.பாலகிருபன், ஆயர்வேத மருத்துவர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பிரசன்னத்துடன் தைத்திருநாள் பொங்கல் நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றது.
உலக இயக்கத்திற்கும் உயிர்வாழ்விற்கும் அடிப்படையாக திகழும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக சம்பிரதாய முறைப்படி பொங்கல் பொங்கி படைக்கப்பட்டது.
தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்று போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு ஊழியர் நலன்புரிச்சங்கத்தினரால் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



