2024ஆம் ஆண்டிற்கான மல்லாவி பொதுச்சந்தை மற்றும் துவிச்சக்கர வண்டிகளுக்கான ஏலக்கூறலானது துணுக்காய் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் 15.12.2023 அன்று பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.கார்த்திகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அவ் ஏலக்கோரலில் விநாயகமூர்த்தி பரமகுருநாதர் என்பவரினால் அதிகமாக 1,670,000.00 ரூபா கேட்கப்பட்டு துணுக்காய் பிரதேச சபையினால் அவருடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஏலக்கோரலில் வருமானப்பரிசோதகர் விடய உத்தியோகத்தர் மற்றும் ஏலதாரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.