நீண்ட காலம் எதுவித புனரமைப்பும் செய்யப்படாமல் இருக்கும் முக்கிய கிராமிய வீதிகளானது பொது மக்களின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு பொிதும் பாதிப்பாக அமைந்துள்ளது. எனவே சபையின் இயலுமையினைப்பயன்படுத்தி அப்பிரச்சினைகளுக்கு தீா்வு காணும் நோக்கில்
சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கிராமிய வீதிகளின் புனரமைப்பு பணிகள் சபை நிதியைப்பயன்படுத்தி கட்டம் கட்டமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் முதற்கட்டமாக ஆரோக்கியபுரம் உள்ளக வீதிகள் திருத்தம் செய்யும் நடவடிக்கைகளானது சபையின் செயலாளாினால் தொழில்நுட்ப உத்தியோகத்தாின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம்(15.04.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.




