உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானமும் விழிப்புணா்வு நிகழ்வும்

பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (Ending Plastic Pollution) எனும் உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருளுக்கு இணங்க இவ்வாண்டுக்கான சுற்றாடல் வாரம் மே 30 ஆம் திகதி முதல் ஜுன் 5 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.
இதனூடாக, உலகளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் மூலம் ஏற்படும் மாசுபாட்டிற்கு இறுதித் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் எதிர்ப்பார்ப்புடன் பிளாஸ்ரிக் மாசுபாட்டிற்கு எதிராக போராடுவதற்கான கூட்டு நடவடிக்கையொன்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவ் ஏற்பாடுகளிற்கிணங்க துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் தலைமையில் 04.06.2025 அன்று துணுக்காய் பிரதேச எல்லைக்குட்பட்ட பிரதான இடங்களில் சிரமதான நிகழ்வுகள், பிளாஸ்டிக் சேகரித்தல் நிகழ்வு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தல் எனும் கருப்பொருளின் கீழ் பொதுமக்களிற்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top