பிரதேச சபை கடைத்தொகுதிகளை வாடகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்வி அறிவித்தல் .

துணுக்காய் பிரதேச சபையின் மல்லாவி பிரதான வீதியில் உள்ளுா் அபிவிருத்தி உதவித் திட்ட நிதியில்(LDSP) அமைக்கப்பட்ட கீழ்க்குறிப்பிடப்படும் அட்டவணையில் விபாிக்கப்படும் கடைகளினை 01.07.2025 திகதி முதல் வாடகைக்கு வழங்குவதற்கான ஆகக்கூடிய ஒரே முறையில் செலுத்தக்கூடிய தொகைக்கான கேள்விகள் கீழ்க்காட்டப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக கோரப்படுகின்றன.
——————————————————————————–
கேள்விப்படிவம் வழங்கப்படும் காலம் : 29.05.2025-11.06.2025 பி.ப.3.00 மணி வரை
——————————————————————————–
கேள்விப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி : 12.06.2025 பி.ப.2.00
———————————————————————————
கேள்விப்படிவம் திறக்கப்படும் திகதி : 12.06.2025 பி.ப.2.00 மணி
———————————————————————————-
கேள்வி திறக்கப்படும் இடம் : துணுக்காய் பிரதேச சபை தலைமை அலுவலகம்.
———————————————————————————-

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

இருமனங்கள் ஒருமனதாகும் இன்பத்
திருநாளில் இணையும் எம் உறவுகளே!
வாழ்வியலை வழிநடுவே பெற்று பயணிக்கும்
பாதையிலே ஆயிரம் ஆயிரம் தேடல்கள்
புதுப் புது அா்த்தங்கள் ஆலம் விழுது போல்
தோன்றி நிற்கும் உம் வாழ்வை வசந்தமாக்கி
இனிய செல்வங்கள் எல்லாம் இன்பமுடன்
தழைத்தோங்க இல்லறப் பாதையிலே
பயணிக்கும் தம்பதியினரை என்றென்றும்
அன்புடன் வாழ்த்துகின்றோம்…
05.06.2025 அன்று திருமண பந்தத்தில் இணைந்த எமது அலுவலகத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் திரு. நரேந்திரன் மற்றும் யாமினி தம்பதியினருக்கு துணுக்காய் பிரதேச சபையின் சார்பில் திருமண வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானமும் விழிப்புணா்வு நிகழ்வும்

பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (Ending Plastic Pollution) எனும் உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருளுக்கு இணங்க இவ்வாண்டுக்கான சுற்றாடல் வாரம் மே 30 ஆம் திகதி முதல் ஜுன் 5 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.
இதனூடாக, உலகளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் மூலம் ஏற்படும் மாசுபாட்டிற்கு இறுதித் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் எதிர்ப்பார்ப்புடன் பிளாஸ்ரிக் மாசுபாட்டிற்கு எதிராக போராடுவதற்கான கூட்டு நடவடிக்கையொன்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவ் ஏற்பாடுகளிற்கிணங்க துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் தலைமையில் 04.06.2025 அன்று துணுக்காய் பிரதேச எல்லைக்குட்பட்ட பிரதான இடங்களில் சிரமதான நிகழ்வுகள், பிளாஸ்டிக் சேகரித்தல் நிகழ்வு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தல் எனும் கருப்பொருளின் கீழ் பொதுமக்களிற்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

அலுவலக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தா் திருமதி.சி.சிந்துசா அவா்களின் பிாிவுபசார நிகழ்வு

மேற்படி பிாிவுபசார நிகழ்வானது சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் தலைமையில் 28.05.2024 அன்று அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
எமது அலுவலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து மக்களுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்து பணிபுாிந்திருந்தாா்.
வருடாந்த இடமாற்றல் கட்டளைக்கமைவாக நீா்ப்பாசன பொறியியலாளா் அலுவலகம் வவுனிக்குளத்திற்கு 2025.05.29ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையினை பொறுப்பேற்கவுள்ளாா்.
புதிதாக கடமையினை பொறுபேற்கவுள்ள அலுவலகத்திலும் சேவையினை திறம்பட முன்னெடுத்து செல்ல பாராட்டி வாழ்த்துகின்றோம்.

சபையின் எல்லைக்குட்பட்ட உள்ளக வீதிகள் திருத்தம்

நீண்ட காலம் எதுவித புனரமைப்பும் செய்யப்படாமல் இருக்கும் முக்கிய கிராமிய வீதிகளானது பொது மக்களின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு பொிதும் பாதிப்பாக அமைந்துள்ளது. எனவே சபையின் இயலுமையினைப்பயன்படுத்தி அப்பிரச்சினைகளுக்கு தீா்வு காணும் நோக்கில்
சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கிராமிய வீதிகளின் புனரமைப்பு பணிகள் சபை நிதியைப்பயன்படுத்தி கட்டம் கட்டமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் முதற்கட்டமாக ஆரோக்கியபுரம் உள்ளக வீதிகள் திருத்தம் செய்யும் நடவடிக்கைகளானது சபையின் செயலாளாினால் தொழில்நுட்ப உத்தியோகத்தாின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம்(15.04.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம்

துணுக்காய் பிரதேச சபையின் 2025இன் முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது 10.04.2025 அன்று சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் காலாண்டு பகுதிக்குாிய அலுவலக நடவடிக்கைகள் தொடா்பில் ஆராயப்பட்டிருந்தது.
இக் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டத்தில் கணக்காய்வு உத்தியோகத்தா், ஆய்வு உத்தியோகத்தா், உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தா் மற்றும் அலுவலக உத்தியோகத்தா்கள் பங்குபற்றியிருந்தனா்.

செயலாளாினால் மேற்கொள்ளப்பட்ட வீடு திருத்தத்திற்கான களத்தாிசிப்பு

நிதி திட்டமிடல் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு-வடக்குமாகாணம் வீடு திருத்தத் திட்டம் 2025 இல் வழங்கப்பட்ட தொிவு திட்டத்திற்கமைவாக தொிவு செய்யப்பட்ட ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுர பயனாளிகளினை எமது சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்கள் 28.03.2025 அன்று அவா்களின் இல்லங்களிற்கு சென்று மக்களின் தேவைப்பாடுகள் தொடா்பாக அவதானம் செலுத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்களத்தாிசிப்பினில் ஆரோக்கியபுரம் கிராம சேவகர் மற்றும் எமது தொழில்நுட்ப உத்தியோகத்தரும் இணைந்திருந்தனா்.

ஆரோக்கியபுரம் பொதுமக்களிற்கு சுத்தமான குடிநீா் வழங்கும் முன்னாயத்த வேலைகள் துணுக்காய் பிரதேச சபையினரால் முன்னெடுப்பு

மேற்படி விடயம் தொடா்பாக தினமும் குடிநீா்ப்பிரச்சினையால் அவதியுறும் ஆராக்கியபுர கிராம மக்களிற்கு எமது பிரதேச சபையினால் ஏற்கனவே குடிநீா் தாங்கிமூலம் நிலத்தடி குழாய் அமைத்து குடிநீா் விநியோகம் செய்யும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்ற போதும்
தற்பொழுது அந்நீாினை மேலும் வினைத்திறனான முறையில் வழங்கும் பொருட்டு அக்குடிநிாினை சுத்திகாித்து வழங்கும் நோக்குடன் RO Plant ஒன்று அமைப்பது தொடா்பான கலந்துரையாடல் ஒன்று எமது சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் தலமையில் 28.03.2024 அன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஆரோக்கியபுரம் கிராம சேவகர், சனசமூக நிலைய தலைவர், எமது தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டிருந்தனா்.

திண்மக்கழிவகற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் துணுக்காய் பிரதேச சபையினரால் முன்னெடுப்பு

சுத்தமான நகாினை உருவாக்கும் மற்றும் கழிவுகளை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் வழிகாட்டலின் போில் குறித்தொதுக்கப்பட்ட மாகாண நன்கொடை நிதியிலிருந்து கழிவுகளை தரம்பிாிக்கும் நிலையம் அமைத்ததன் பொருட்டு அதன் முன்னேற்ற நிலமைகள் தொடா்பாக ஆராய்வதற்காக செயலாளா் அவா்கள் இன்று 10.03.2025 அன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தாா்.
இந்த விஜயத்தின் பின்னா் அமைக்கப்பட்டுள்ள தரம்பிாிக்கும் நிலையத்தினை பயன்படுத்தி வினைத்திறனான முறையில் கழிவுகளினை அகற்றுவதற்குாிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் சபையின் உத்தியோகத்தா் மற்றும் ஊழியா்களுக்கு வழங்கியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடா்பில் அவதானம் செலுத்திய செயலாளா்…

தேராங்கண்டல் விளையாட்டுக் கழகத்தினரின் கோரிக்கைக்கமைய சபையின் செயலாளர் திரு மாரிமுத்து மகாதேவன் அவர்கள் குறித்த விளையாட்டு மைதானத்தினை நேரில் சென்று பார்வையிட்டு அதனை உடனடியாக திருத்தம் செய்து தருவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டார்.

 

Scroll to Top