பொதுமக்கள் குறைகேளிற்கு அவதானம் செலுத்தினாா் சபையின் செயலாளா்

பொது மக்கள் குறைகேள் whatsapp குழுவில் முறையிடப்பட்ட மங்கைநகர் 1ம் ஒழுங்கையின் நிலையினை நேரில் சென்று பார்வையிட்டு அதற்குரிய தீர்வினையும் அந்த இடத்தில் வைத்தே சபையின் செயலாளர் திரு.மா.மகாதேவன் அவர்கள் வழங்கினார்.

பொது மக்களுடனான சந்திப்பு

சபை நிதி மூலம் அம்பலவிநாயகர் சனசமூக நிலையத்திற்கான கட்டடம் அமைப்பதற்குரிய இடம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொது மக்களுடனான சந்திப்பு சபையின் செயலாளர் திரு.மா.மகாதேவன் தலைமையில் அம்பலப்பெருமாள் குளத்திற்கருகே 11.02.2025 நடைபெற்றது.
+10

See insights and ads

Boost post
All reactions:

1

பிரிவுபசார நிகழ்வும் வருடாந்த ஒன்றுகூடலும்.

எமது அலுவலகத்திலிருநது இடமாற்றலாகிச் சென்ற முன்னாள் செயலாளர் திரு.பாலகிருபன், ஆசிரியர் பதவிக்கு மாற்றலாகிச் சென்ற திருமதி. உஷாந்தினி ஆகியோரின் பிரிவுபசார நிகழ்வும் வருடாந்த ஒன்றுகூடலும்.

 

2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம்

எமது அலுவலகத்தின் 2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்குரிய கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டமானது 21.01.2024 திகதி காலை 9.30 மணியளவில் சபையின் செயலாளர் திரு.மா.மகாதேவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளா், கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனா்.

துயா் பகிா்கின்றோம்

எமது அலுவலகத்தின் வருமானப் பரிசோதகா் தி.கிருபாகரனின் அன்புத் தாயார் கடந்த 17.01.2025 அன்று இயற்கை எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

2023ஆம் ஆண்டிற்கான பொதுத்துறையின் சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கியலுக்கான உயா் விருதினை பெற்றுக்கொண்ட துணுக்காய் பிரதேச சபை

2023ம் ஆண்டிற்கான சிறந்த கணக்குகள் மற்றும் அறிக்கையிடலில் துணுக்காய் பிரதேச சபையானது
BMICHல் வைத்து 02.12.2024அன்று இலங்கை பட்டயக்கணக்காளா் நிறுவனத்தினா் மற்றும் APFA நிறுவனத்தினரால்
CERTIFICATE OF COMPLIANCE உயர் விருதினைப் பெற்று எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
—————————————————————————————————————————————————-
இவ் விருதினை பெற தனது அனுபவ அறிவினையும் வழிகாட்டிகளையும் வழங்கிய செயலாளர் திரு.மா.மகாதேவன் அவர்கட்கும்
—————————————————————————————————————————————————-
இவ்விருதிற்காக கடந்த ஆண்டு அயராது பணியாற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும்
—————————————————————————————————————————————————-
இவ்வறிக்கையினை திறம்பட உருவாக்கிய எமது உத்தியோகத்தா்களுக்கும்
—————————————————————————————————————————————————-
சபையின் சாா்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சூறாவளியொன்றின்போது……….. நீங்கள் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்!!!

Scroll to Top